Friday, September 16, 2016

வள்ளுவத்தில் சமுதாயம்

    வள்ளுவர்காலச் சமுதாயத்தின் தன்மையை அவர்தம் நூலில்லிருந்தே உயர்த்துனரலாம். உழவுத் தொழிலைத் தலைமையாகக் கொண்ட மருதநிலச் சமுதாயத்தில் நாகரிகம் நிலை கொண்டு கோனாட்சி வேர்விட்டிருந்த சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த சமுதாயத்தில் தமிழர்கள் வாழ்ந்த நிலையினைக் குறளில் காண்கிறோம். வள்ளுவர் காலத்தில் பொருட் செல்வத்தால் பெருமை எய்திய சிலர் இருந்தனர். அன்றாட குடல் கழுவுவதற்கு வழி தெரியாத ஆலாய்ப் பறந்த ஏழைகளாகப் பலர் இருந்தனர். “கரவாது உவந்த ஈயும்” என்ற குறளில் குறிப்பிடுவது போல செல்வர் சிலரைக் கண்டிருக்கிறார்.      “ஈட்டம் இவறி இசை வேண்ட” என்ற குறளில் நூன்மங்களையும் பூமிக்குப் பாரமாய் வந்த பிறவிகளையும் அறிந்துள்ளார். தொழில் பிரிவினை தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதாலும் குலங்களை நாகரிகர் சமுதாயத்தின் அங்கங்களாக அமைந்த ஏற்பாட்டின் மூலம் சாதி முறை இன்றிய சமுதாயத்தில் வள்ளுவர் வாழ்ந்தார். முல்லை நிலத்திலேயே ஆயருக்கு அடங்கிய பாணன் துடியன், பறையன், கடம்பன் என்றும் குடிகள் வாழ்ந்தனர் என்பது மாங்குடிகிழார் பாடல் ( புறம் 335) விளங்கும்.  மருதநிலச் சமுதாயத்தில் இந்தக் குடிவகைகள் பல்கிப் பெருகியது இயல்பே.

    கொடுங்கோல் மன்னர்களும் அறம்பேணாச் செல்வர்களும் போலித் துறவிகளும் இன்னோரன்ன பிறரும் சமுதாயத்தின் சத்ருக்கள் என்பதை உணர்த்தும். அந்தத் தியோருக்கு இடமில்லாததும் மாநிலம் எங்கும் மக்கட் பண்பு மலர்ந்து மணம் வீசுவதுமான புதுமைச் சமுதாயத்தை தோற்றுவிக்கும் பேரார்வத்தால் உந்தப்பட்டே வள்ளுவர் தம் நூலைப் படைத்தார்.

    அற உணர்வில் எழும் உலகப் பொதுமைக்கு ஊறு நேராத வண்ணம் அவர் இமை கொட்டா விழிப்போடு தற்காத்துக் கொள்ளும் தகைமை போற்றுதற்கு உரியது. தமிழை வாழ்வித்த மூவரில் ஒருவரான வள்ளுவர் தமிழையோ தமிழ் நாட்டையோ ஓரிடத்திலேனும் குறித்தாரில்லை. “அருள் தமிழ் ஆற்றல்”, “தென் தமிழ் ஆற்றல்”, என்று சிலப்பதிகாரத்தில் - இளங்கோவடிகள் கவிக்கூற்றிலேயே ஆற்றுவார்.  வள்ளுவர் படை வீரத்தைப் பற்றிப் பேசும் போதோ நாட்டு வளத்தைப் பற்றிப் போசும்போதோ தமிழை உவமையாகக் குறிப்பிட்டிருக்கலாம். கதலைப் பற்றிப் பேசும்போது மலரின் மென்மைய உவமையாகக் கொள்வதைப் போல் தமிழின் இனிமையைச் சுட்டியிருக்கலாம். ஆனால் சாதி, சமயம், நாடு, மொழி முதலிய எல்லைகள் அனைத்தையும் கடந்த மனிதகுல நல நாட்டம் மணிகளின் ஊடே செல்லும் பொன்னூல் போல் திருக்குறள் பாக்கள் அனைத்தையும் ஊருவி நிற்கிறது என்று பாரதி கூறுவார்.

    “வரும் குணத்தாலும் செயலாலும் கீழ்மை இல்லா
     தார் கீழ்மகக்கள் ஆகார்”

    யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல, வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை - பாரதி தமிழ்.

    “கரவாது உவந்து ஈயும் கண்ணன்னார் கண்ணும்
      இரவாமை கோடி யுறும்”

    உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

    “ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
     தோற்றம் நிலடுப் பொறை”

    சேர்த்து வைப்பதையே விரும்பும் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாததை மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.

    கராவது      -    (இருப்பதை) ஒளிக்காது
     கண்          -    (சமுதாயத்தின்) கண் போன்றவர்
     ஈட்டம்       -    பொருளைத் திரட்டுவதை
     இவறி        -    பேராசைகொண்டு
     இசை        -    புகழ்


“மேல்இருந்தும் மேல்அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
 கீழ் அல்லார் கீழ் அல்லவர்”

    மேல் நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர் கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.

    கலைஞர்களும் அறிஞர்களும் சமுதாயத்தில் பிறந்து வளர்கிறார்கள். அவர்கள் சமுதாய வாழ்வின் நினைவுகளையோ அனுபவங்களையோ புறக்கணித்துவிட்டு வெறுமையில் கற்பனை செய்யவோ, சிந்திக்கவோ முடியாது. ஒருவருடைய சிந்தனை, உணர்ச்சி, கற்பனை எல்லாம் அவர் சமூக வாழ்வில் பெறும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை சமுதாயமோ ஒரே நிலையில் இருப்பதில்லை. அது மாறுகிறது வளர்கிறது. காலந்தோறும் மாறுதலும் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் கருத்துக்கள் மாறுதல் அடைவதும் பண்பாடு செம்மையுறுவதும் வரலாற்று ஆசிரியர் ஒப்பும் உண்மைகளாகும். நாம் இதை ஓர் உதாரணத்தால் உணர்ந்து கொள்ளலாம். சுதந்திரம் அல்லது உரிமை என்று கருத்து காலப்போக்கில் செழுமையடைந்து வருவதை நாம் நன்கறிவோம். சட்டமன்றக் குடியாட்சி முறையே உரிமைக்கு உத்தரவாதம் என்ற கருத்து நூற்றாண்டுகட்கு முன்னர் நிலைப்பெற்று விளங்கியது. நெடிது நோக்கும் நோன்மை படைத்த கார்ல்மார்க்ஸ் போன்ற அறிஞர் சிலரே அக்கருத்தின் தவறை அக்காலத்தில் உணர்த்திருந்தனர். ஆனால் சோஷலிஸர் சமுதாயத்தில் தான் சட்டமன்றக் குடியாட்சி முறையும் உரிமைக்கு உறுதி தேடுமென்ற சிந்தனை இக்கால மக்களில் பெரும்பாலோரை ஆட்டிப் படைத்து வருகிறது. எனவே திருக்குறளில் வாழ்வியல் மட்டும் அல்லாமல் அரசியல் போன்ற பல் நோக்க முறையில் வகுத்துள்ளார் இதில் அறிந்த செய்தி சமுகம்மட்டுமே.


பார்வை :

Ø திருக்குறள் ஒரு சமுதாயப் பார்வை -
                      டாக்கடர் .எஸ் இராமகிருஷ்ணன்


Ø திருக்கறள்   -    டாக்கடர் மு. வரதராசனார்

Wednesday, July 20, 2016

அற இலக்கியங்களில் கல்விச் சிந்தனை
                                       க.பிரகாஷ்                    
                                                        தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
                                                        தமிழ்த்துறை
                                                        பாரதியார் பல்கலைக்கழகம்
                                                        கோயம்புத்தூர் – 46 
அறம்

     ‘அறு’ என்ற வினைச் சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். அச்சொல்லுக்கு அறுத்துச்சொல், வழியை உண்டாக்கு, எருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்றும் குறிப்பிடுகின்றனர். பின்னர் மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். பிறவிதோறும் மனிதனைப் பற்றி கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம் என்று ஆன்மீகம் விளக்குவதுண்டு.

நீதி இலக்கியம்

     நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும் கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் பல்கிப் பெருகின. சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட்டு தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாமை நிலவியாதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும் பின் தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

     “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
      பால்கடுங் கோவை பழமொழி மாமூலம்
      ………………………………………………………………………………………………………………………..
      கைந்நிலைய வாய் கீழ்க் கணக்கு

     நீதி இலக்கியங்களில் குறிப்பிடும் இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரகோவை, நான்மணிக்கடிகை, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, நாலடியார், திருக்குறள் ஆகிய பதினொரு நூல்களிலும் கல்வி பற்றிய செய்திகள் மிகுதியாக காணப்படுகின்றன.

கல்வி பொருள்

     மனிதன் தம்முடைய வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் மரபுகளையும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லுகிறது. உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ அடிப்படைக் காரணியாக விளக்குவது கல்வி. கல்வி என்னும் சொல்லுக்கு பொருள் கல்லுதல் என்பதனை தோன்டுதல் கல் என்னும் அடிச்சொல்லிருந்து கலப்பை என்ற பெயரும், கல்வி என்ற பெயரும் வந்தன. நிலத்தைக் கிளவுவதற்குக் கலப்பை பயன்படுவது போல கல்வி கல்லுதல் என்பது மனத்தைக் கிளறித் திருத்திப் பயன்படுத்துவதாகும் என்கிறார்.
     கற்கும் கல்விக்கு பல பொருள் : அறிவு, கற்றல், நூல், வித்தை, பயிற்சி, உறுதி, ஊதியம், ஏதி, காரணம், கலை, கேள்வி, கால்பு, தேற்சி, விஞ்சை என்று கௌரா தமிழ் அகராதி விளக்கம் அளிக்கிறது.

நாலடியார் கூறும் கல்விச் சிந்தனை

     “ குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
      ………………………………………………………………………………………………………………………………
      ……………………………………………………………….. நடுவ நிலைமையால்
      கல்வி அழகே அழகு.”

     நல்ல மணம் வீசும் கூந்தலுடைய அழகும், மேனி ஜொலி ஜொலிக்க உடுத்திய ஆடை அழகும், அள்ளிப்பூ அழகு செய்த ஒப்பனையுடைய மஞ்சள் நிறத்தழகும் ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகாது.
     உள்ளத்தால் நல்லவர்களால் வாழும் வாழ்க்கை வழி நெறி தவறாத வழிச் செலுத்தும் கல்வியே ஒருவருக்குச் சிறந்த அழகு சேர்க்கும் அணிகலனாகும்.

     “கல்வியில கரையில கற்பவர் நாள்சில
      மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதன்
      …………………………………………………………………………………………………………………………..
      பாலுண் குருசின் தெரிந்து” – (நால 1)

கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகு அளவு, கல்விக்குக் கரையும் இல்லை, கற்றுத் தெரிந்து கொள்வதற்கு ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கிடைத்தாலும் நிறைவேறாது. அவ்வளவு நிறைந்து இந்த மிகக் குறைந்த வாழ்நாளில் இடையிடையே மெல்ல மெல்ல வந்து தாக்கும் நோய்கள் ஒருபுறம், மீதம் இருக்கம் நாட்களில் வாழ்க்கையைப் பயனுடையதாகத் தேர்ந்து தெளிந்த நல்ல நூல்களைக் கற்றிட வேண்டும்.

      பாலும், நீரும் கலந்திருக்கும் பாத்திரத்தில் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

     “………………………….. யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
      நல்லறிவு நாளுந் தலைப்படுவர் …………………………………………….
      ……………………………………………………………………….. சேர்தலாற் புத்தோடு”

     படிப்புக்கு வசதியில்லாததால் படிப்பில்லாதவர்கள் என்றாலும் படித்தறிந்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால் அவர்களுக்கு அந்தப் பெரியோர் சேர்க்கையால் கொஞ்சம் கொஞ்சம் நல்ல அறிவு கிடைக்கப் பெறுவார்கள்.

கடிகையில் கல்வி

     “கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
      ………………………………………………………………………………………………………
      ……………. உயர்ந்த எலகம் புகும்”.

     ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றால் அவன் அறியாமை குறையும், அறியாமை குறைந்தால் புல்லறிவு நீங்கி இவ்வுலக இயற்கையை அறிவான் அவ்வாறு அறிந்தால் மெய்ந்நெறியாகிய ஞானநெறியில் செல்வான் அவ்வாறு செல்லின் இவ்வுலகில் பெற வேண்டிய புகழை நிலைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான்.

     “ ……………………………………………………………………………. ஒருவற்குக்
      கற்றலின் வாய்த்த பிற இல்லை என்றுள்ளும்
      ………………………………………………………………………………………………………………….
      …………………………………………………………………………… இல்”.      - 32

     செல்வத்தைப் போல ஒருவறுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போலத் துணையாவது, பிறிதில்லை, வறுமையைப் போலத் துன்பம் தரக்கூடியது வேறு எதுவுமில்லை கொடுப்பதைப் போலத் திட்பமானது வேறு இல்லை.

     “………………………………………………………… காதலர் கண்ணோடார்
      ………………………………………………………………………………………………………………………………...
      உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புரையும்
      ……………………………………… புல்லறிவினார்”. – 58

கற்றவரோடு விரும்பி வாழ்பவர் கற்றவரேயாவர். கண்ணோட்டம் இல்லாதவர் இடம் செய்பவரை ஒப்பர். எவற்றையும் மறைக்காமல் உண்மையை உள்ளபடியே கூறாதவர் பகைவரே ஆவார் சிற்றறிவினையுடையவர் யாம்பும் புற்றுக்கு ஒப்பாவர்.

     “ கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
      ………………………………………………………………………………………………………………..
      நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
      ………………………………………………………….. பகை”.

கொடுந்துன்பங்கள் வருதலால் எப்பொழுதும் பிறர் பொருளைக் கவராதிருக்க வேண்டும். தகுதியுடைய நல்ல ஒழுக்கச் செயல்களை நீக்காதிருக்க வேண்டும். சிற்றினத்தரோடு சேராதிருத்தல் வேண்டும் எவரிடத்தும் பகைமை கொள்ளாதிருத்தல் வேண்டும்.

திரிகடுகம் கூறும் கல்வி

     விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தரும் வகையில் கல்வி பற்றி சில சிந்தனைகள் சிதறுக்கின்றது.

     “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
      ……………………………………………………………………………………………………………………………………
      நன்மை பயத்தல் இல”. – 10

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்வதும், வழக்கைத் தீர்த்து வைக்கின்ற அறிஞர்கள் இல்லாத சபையில் இருப்பதும் பருத்து உண்ணும் பண்பில்லாதவர் பக்கத்தில் இருந்து வாழ்வதும் ஆகியனைத்தும் மாறாகத் தீமைகளையே உண்டாக்கும்.

     “நுண்மொழி நோக்கில் பொருள் கொளலும் நூற்கேலா
      …………………………………………………………………………………………………………………………………………………………
      கற்றறிந்தார் புண்ட கடன்”. – 32

     நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களைக் கொள்ளுதலும் நூல்களுக்கு ஒவ்வாத சொற்களை பலர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும் நல்ல சொற்களைக் கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம்மூன்றும் கற்றறிந்தார் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும்.

     சொற்போக்குக்கு ஏற்ப பொருள் கொள்ளல் பயனற்ற சொற்கள் கூறாதிருத்தல் நல்ல நூற்கருத்துக்களை விரும்புவர்க்கு கற்பித்தல் ஆகிய மூன்றும் கற்றறிந்தார் கடமைகள் ஆகும் என்பது கருத்தாகும்.

சிறுபஞ்சமூலம் கூறும் கல்வி

     “தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
      ……………………………………………………………………………………………
      துன்ப மிலேம் பண்டுயாமே வனப்புடையேம்    - 20

அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பு. முதுமை வருவதற்கு முன்னே பொருள் தேடிவைத்துக் கொள்ளாதவர்கள் அறிவிலார் ஆவார்கள். முன்பு பொருளுடைமையால் துன்பமில்லாமல் வாழ்ந்தோம். அப்பொழுது யாமே அழகுடையவராக இருந்தோம் என்று கூறிக்கொள்கின்றவர் இருகால் எருதுகளுக்கு நிகராவர்கள்.

     “……………………………………………………………… எல்லாம் யாதொன்றும்
      …………………………………………………………………………………………………………………………………..
      குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்” – 31

எல்லாவற்றையும் அறிந்தவனும் யாதொன்றும் அழியாதவனும் நற்குணமே இல்லாதவனும், குற்றமே இல்லாதவனும், எல்லா நூல் தொகுதிகளையும் முழுமையாகக் கற்றவர் இவ்வுலகில் இல்லை.

     “ சத்தமெய்ற் ஞானம் தருக்கம் சமயமே
      …………………………………………………………………………………… அத்தகத்து” – 86

வழக்காகிய இலக்கண நூல், அறிவுநூல், அளவை நூல், சமய நூல், அறிவின் மிக்கோர் இயற்றிய வீடு பேனைப் பற்றிய நூல் என்ற இவ்வைந்தையும் அறிபவன் மக்களுன் மேலானவனாவான்.

ஆசாரம் கூறும் கல்வி

     “தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
      முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க …………………………
      ……………………………………………………………………………………………………………… கெடும்”.

ஆசிரியர்க்குக் காணிக்கையைத் தருதல் யாகம் செய்தல் தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது. விளங்குமாறு பாதுகாத்துச் செய்க. மாறுபட்டு விளங்கின எக்காலத்திலும் எவ்வுலகத்திலும் தனக்குப் பயன்படாமல் போகும்.

ஏலாதி கூறும் கல்வி

     “ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
      பேணொடு எண்ணும் எழுத்திவை …………
      ……………………………………………………….............................................
      வேட்டெழுத வாழ்வார் விரிந்து.

இப்பிறப்பில் அறிஞர்கள் தனது வரலாற்றை விரும்பி எழுத வாழ்வு பெருகி வாழ்கின்றவர்கள் விருப்பத்தோடும் நற்குண நற்செயல்களோடும் எண்ணும் எழுத்துமாகிய கல்வியை ஆசிரியர்களிடத்தில் பாடம் கேட்டும் ஏட்டில் எழுதியும் படித்தும் வாழ்கின்ற தலைசிறந்த மாணாக்கர்களுக்கு முன்பிறப்பில் உணவொடு எடையும் எழுத்தாணியும், புத்தகச் சுவடியும் கொடுத்து உதவினார்களே ஆவர். ஊக்கத்தோடு கற்கும் மாணவர்களுக்கு ஊண், உடை முதலியவற்றைக் கொடுத்துதவுகின்றவர்கள் பெற்று விளங்குவார்கள்.

முதுமொழிக்காஞ்சியில் கல்வி

     “கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று”.
                                           – சிறந்த பத்து

அரிய உண்மைகளைக் கற்றலை விட கற்றறிந்த பெரியோரைப் போற்றியொழுதுதல் மேலானது. கற்றார் வழி நிற்பவர்க்குக் கற்றலின் பயன் எளிதில் கைகூடுமாகலின் வழிபடுதல் சிறந்ததாயிற்று என்க.

கற்றது உடைமை

     “கற்றது உடைமை காட்சியின் அறிய”.
                                     – அறிவுப் பத்து
     கற்ற கல்வியுடைமையை அறிவினால் அளந்தறிவர்.

கற்றது கல்வி

     “நேராமல் கற்றது கல்வி யன்று”.
                                     – அல்ல பத்து

கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. ஆகலின் ஆசிரியனுக்கு உற்றுழி உதவவேண்டும் என்க.

திருக்குறளில் கல்வி

     “கற்க கசடறக் கற்பவை கற்றபின் – 391

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

     “ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவள்”  - 398

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
     பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் குறிப்பிடும் பதினொரு அற நூல்களும் ஒரு மனிதனுக்கு நோய்தீர்க்கும் மருந்தாகவும், தூங்கி கொண்டிருப்பவனை எழுப்பும் வகையிலும், சோர்ந்திருப்பவனை சுறு சுறுப்படையவும், விழுந்தவனை எழுந்து நிற்க வைக்கும் அளவிற்கும், விருந்தினருக்கு விருந்தோம்பலாகவும் இவ்வகை இலக்கியங்கள் சுவைத்தால்      ( பயின்றால்) தெவிட்டாத கருத்துகளாகும்.
     நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள், பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இனியவை நாற்பது, முதுமொழி காஞ்சி என இவ்வகை அற இலக்கியங்களில் மனிதனுக்கு ஒழுக்கத்தை மட்டும் கற்றுகொடுக்காமல் கல்வி என்ற பெயரில் மனித மனதை வழுப்பபடுத்துகிறது. கல்வி என்பது  “கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்ற நாலடியாரில் குறிப்பிடுவது போல கல்விக்கு கரையும் மில்லை கற்று தெரிந்து கொள்ளுவதற்கு ஆயிரம் ஜென்மங்கள் கிடைத்தாலும் நிறைவேறாது என்பர்.

பார்வை
1. பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 1 – வித்துவான் துரை.                                                இராசாராம்
2. பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – வித்துவான் துரை.                                                இராசாராம்
3.   நாலடியார் நற்சிந்தனைகள் – கே.எம். நாச்சிமுத்து
4.   கௌரா தமிழ் அகராதி
5.   தமிழ் இலக்கிய வரலாறு – பேராசிரியர் மது.ச.விமலானந்தம்


Tuesday, June 28, 2016

எறும்பின் சாபம்

              க.பிரகாஷ், எம்.ஏ, எம்.பிஃல்,                     தமிழ்த்துறை                     தொழில் நுட்ப்பக் கள ஆய்வுப் பணியாளர்                     பாரதியார் பல்கலைக்கழகம்                     கோயம்புத்தூர் - 46









ஆசிரியர் :     எறும்பும், ஈயும் நெறுங்கிய சினேகிதர். அது  கிராமத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தது. ஈ வீட்டுவேலையும், எறும்பு விவசாயத்தையும் பார்த்து வந்ததுர்.

ஆசிரியர் :    எறும்பு ஏறு ஓட்டுவதற்காக சென்றுவிட்டது.  ஈ வீட்டில் சமையல் வேலை முடித்துவிட்டு, சுவையாக எதையாவது சமைப்போம் என்று பாயாசத்தை செய்து கொண்டு இருந்தது.

ஈ :            என்னடா! ஏறு ஓட்டபோனவ இன்னும் காணம். சரி! வரட்டும். பாயாசத்தை அடுப்புல வெச்சேன் என்னாச்சினு தெரியல பாப்போம். வெந்து இருக்கமா?

ஆசிரியர் :    ஏறு ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்தது எறும்பு.

எறும்பு :      எங்கடா அவன காணம், எங்க போயிருப்பான், வீட்டுக்குப் பின்னாடியும் இல்ல, அடுப்புல வேற என்னமோ வச்சிட்டு போயிருக்கான், எங்க போனாலும் சொல்லாம போகமாட்டானே. சரி! வரட்டும் உக்காரலாம்.

ஆசிரியர் :    அந்த வழியில் வந்த கொசு   
  
கொசு :       எறும்பண்ணா அடுப்புல எதோ தீயுர வாசன அடிக்குதுப் பாருங்க.

ஆசிரியர் :    எறும்பு அடுப்பைப் பார்க்க செல்கிறது.

எறும்பு :       மாப்பிள என்ன விட்டுட்டு போயிட்டயேடா எனக்கு வேற யாருடா இருக்காங்க உன்னவிட்டா,

ஆசிரியர் :    சினேகிதன், இறந்தது நினைத்து அழுது கொண்டு இருக்கிறது. அந்த வழியாக வந்த காகம் எறும்பை பார்த்து பேசுகிறது.

காகம் :       எறும்பண்ணா, எறும்பண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, அழுதுட்டு இருக்க.

எறும்பு :      என் சினேகிதன் இறந்து நான் அழுக, காக்கா உன் ஒரு கண்ணு குருடாக.

ஆசிரியர் :    காக்கா கண்ணு குருடாகிவிட்டது. எப்பையும் போல அது வசிக்கும்  பெரிய ஆலமரத்துல போய் உட்காந்துரிச்சி.

ஆலமரம் :    காக்கா அண்ணா, காக்கா அண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, ஒரு கண்ணு குருடாயி வந்துருக்க.

காகம் :       ஈ செத்து எறும்பழ, என் கண்ணு குருடாக, உன் மரம் அடியோட சாய.

ஆசிரியர் :    ஆலமரமும் சாய்ந்து விட்டது. அங்கு வசிக்கும் யானை இரவு எல்லாம் சுற்றி திரிந்து விட்டு ஓய்வுக்காக இந்த மரத்தடியில் தூங்குவது உண்டு. யானை ஆலமரத்தைப் பார்த்துப் பேசுகிறது.

யானை :      ஆலமரமண்ணா, ஆலமரமண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, உனக்கு இப்படி அடியோட சாஞ்சிகிடக்குற.

ஆலமரம் :    ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, நான்  அடியோட சாய, உன் தந்தம் உடைய.

ஆசிரியர் :    யானையுடைய தந்தமும் உடைந்துவிட்டது. தினமும் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு போகும் அந்த யானையைப் பார்த்துப் பேசியது ஆறு.

ஆறு :         ஆனையண்ணா, ஆனையண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, யாருகூட சண்ட போட்ட தந்த உடஞ்சி வந்துருக்க.

யானை :      ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம் அடியோட சாய, என் தந்தம் உடைய, உன் ஆற்று நீர் எல்லாம் வற்றிபோக.

ஆசிரியர் :    ஆற்று நீர் எல்லாம் வற்றி போய்விட்டது.  எப்போதும் இங்க தண்ணீரை எடுப்பதற்காக பொண்னி வருவாள். அவள் ஆறைப் பார்த்து பேசுகிறாள்.

பொண்னி :    ஆறண்ணா, ஆறண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, எல்லாம் தண்ணீயும் நீயே குடிச்சுட்ட. அடி பாவி.

ஆறு :          ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம்  அடியோட சாய, யானை தந்தம் உடைய என் ஆற்று நீர் வற்றி போக உன் இடை மணையாக.

ஆசிரியர் :    பொன்னியின் இடை மணையாகிவிட்டது. பொன்னியைப் பார்த்து ராணி பேசுகிறாள். அடி என்னாடி பொன்னி, இவ்வளவு நாளா நல்லாதானே இருந்த இன்னக்கி ஏன் இப்படி உட்கார்ந்துகிட்ட இருக்க. பொன்னியை பார்த்து பேசுகிறாள் ராணி.


பொன்னி :    ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம்  அடியோட சாய, யானை தந்தம் உடைய, ஆற்று நீர் வற்றி போக என் இடை மணையாக, உன் வாய் ஊமையாக.

ஆசிரியர் :    ராணி ஊமையாகிவிட்டாள்.



இப்படி அக்காலக்கட்டத்டதில் இருந்து இன்று வரையிலும் ஓரறிவு உயிரில் இருந்து ஐந்தறிவு உயிர் வரைக்கும்மே சாபமிட்டால் பழிக்கும் என்பதே ஐதீகம். இனி வரும் காலங்களில் கணினி உலகமாக மாறினாலும், இக்கணினியை பயன்படுத்தும் போது தேவையில்லாத ஒன்றை பயன்படுத்தினால் வைரஸ் என்ற ஒன்று சாபமிட்டு அச்செயலை இழக்கச்செய்கிறது.
இப்படிக்கு சாபம்